Friday, 20 May 2011

ரவா பொங்கல்






ரவை - 1கப்
பாசிப்பருப்பு  - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
முந்திரி - 6
நெய் - கால் கப்

செய்முறை :

* பாசிப்பருப்புடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
* வாணலியில் சிறிது நெய் சேர்த்து ரவையை சிவக்க வறுக்கவும்.
* அதில் 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து ரவை நன்றாக வேகும் வரை கிளரவும்.
* ரவையுடன் வேக வைத்த பாசிப் பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும்.
* நெய்யில் கடுகு, சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
* பொங்கல் கலவையுடன், தாளித்தவை மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும்.

மனம் மயக்கும் ரவா பொங்கல் தயார்.

குறிப்பு

சில நண்பிகள் காரட் பச்சை பட்டாணி பீன்ஸ் சேர்ப்பது உண்டு ஆனால் எனக்கு பிடிப்பது இல்லை

அல்லது
பயத்தம் பருப்பை வேகவைத்து அதில் கொதித்த 5 கப் தண்ணீரை கலந்து வடிகட்டி அந்த பருப்புநீரைக்கொண்டும் செய்யலாம்.


குறிப்பு - 2


ரவை – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
முந்திரி – சிறிதளவு
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உப்பு தேவையான அளவு
நெய் தாளிக்க
செய்முறை
___________
*நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
*மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.
*பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
*ஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
*அடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
*சூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.

No comments:

Post a Comment